இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலை தொடர்பாக ஆராய்வதற்கு சிறிலங்காவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்த போதும் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக நம்பியார் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது அங்கு பலத்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளில் ஒரு நாடு நம்பியாரின் இந்த நிலைப்பாட்டை நேரடியாக எதிர்த்திருந்தது.
அதன் பின்னர் நேற்று மீண்டும் நடைபெறவிருந்த அதிகாரபூர்வமற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நம்பியார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட நம்பியார் இந்தியாவுக்குச் சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியாதான் நம்பியாரின் செயற்பாடுகளின் பின்னனியில் செயற்படுவதாக நம்பப்படுகின்றது.
from (Proff)
http://www.puthinam.com/full.php?2b2QrXe0dZl2K0ecMJ7d3b4cdHJ4d3e4c3cc2CsT3d42aXT2b032Np3e
புதன், 22 ஏப்ரல், 2009
ஆழ வேரோடி, விரிவாக்கமும் உறுதியும் பெறும் இந்திய - சிறிலங்கா இராணுவக் கூட்டு!
போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளரான சிம்ரன் சொட் (Simran Sodh), 'தி ஸ்ரேற்ஸ்மன்' ஏட்டுக்காக எழுதியுள்ள செய்திக்குறிப்பொன்றில் பல புதிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.அவர் அதில் முக்கியமாகக் குறிப்பிடுவதாவது:
"சிறிலங்கா இராணுவத்துக்கு கடந்த சில வருடங்களாக இந்தியா வழங்கிய உதவிகளைப் பொறுத்தவரையில் ஆயுதங்களை விற்பனை செய்வது என்பதற்கு மேலாக பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கைப் பேணிக்கொள்வதற்கான ஒன்றாகவே அது இருந்துள்ளது.
கடந்த சில வருட காலத்தில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகள் மிகவும் ஆழமாக வேரூன்றிச் சென்றுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
புதுடில்லிக்கு கடந்த வருடம் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியைப் (Defence Expo) பார்வையிட்டார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அவர் மிகவும் நுணுக்கமாகப் பார்வையிட்டார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் விஜே சிங், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி மார்ஷல் பாலி ஹோமி ஆகியோரையும் இந்த புதுடில்லிப் பயணத்தின் போது சரத் பொன்சேகா சந்தித்தார்.
இவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது எவ்வாறான கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது தெரியவரவில்லை. மிசோராமில் உள்ள இந்திய இராணுவத்தின் 'கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டு முறை' தொடா்பான கல்லூரியிலும் (Indian Army’s Counter Insurgency and Jungle Warfare School), கர்னாடகா பெல்கம் பகுதியில் உள்ள அதிரடிப்படைக் கல்லூரியிலும் இடம்பெற்ற சிறப்பு பாடநெறிகளுக்கு சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னதாக இந்திரா ரக கதுவீகள் இரண்டை சிறிலங்காவுக்கு இந்தியா விற்பனை செய்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கூட்டிணைந்த வகையிலான சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை கொழும்புடன் பரிமாறிக் கொள்ளும் செயற்பாடுகளையும் புதுடில்லி மேற்கொண்டது.
சிறிலங்காவுடனான ஆயுத வியாபாரங்களை புதுடில்லி எப்போதுமே வரவேற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா வழங்கிவரும் நேரடி இராணுவ உதவிகளுக்கு மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
இந்தியா உட்பட பல நட்பு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இந்த நிலையில் இராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதற்கு அந்த நாடுகள் முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளையில் சிறிலங்காவின் போர் நிலைப்பாட்டுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாகச் செயற்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு தாம் நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தொடர்ந்தும் வற்புறுத்திவந்த போதிலும், தேர்தல் சமயத்தில் கூட இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் யாப்பா, அதற்காக சிறிலங்கா இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், "தேர்தல் சமயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்குச் சென்று யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டனர் ஆனால், இந்திய அரசு அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்.
From
-----------
http://www.puthinam.com/full.php?2aXVrYe0dMlYM0ecQJ663b476Bn4d3h4l3cc2IvS3d424UQ2a02ZPp3e
இது தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளரான சிம்ரன் சொட் (Simran Sodh), 'தி ஸ்ரேற்ஸ்மன்' ஏட்டுக்காக எழுதியுள்ள செய்திக்குறிப்பொன்றில் பல புதிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.அவர் அதில் முக்கியமாகக் குறிப்பிடுவதாவது:
"சிறிலங்கா இராணுவத்துக்கு கடந்த சில வருடங்களாக இந்தியா வழங்கிய உதவிகளைப் பொறுத்தவரையில் ஆயுதங்களை விற்பனை செய்வது என்பதற்கு மேலாக பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கைப் பேணிக்கொள்வதற்கான ஒன்றாகவே அது இருந்துள்ளது.
கடந்த சில வருட காலத்தில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகள் மிகவும் ஆழமாக வேரூன்றிச் சென்றுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
புதுடில்லிக்கு கடந்த வருடம் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியைப் (Defence Expo) பார்வையிட்டார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அவர் மிகவும் நுணுக்கமாகப் பார்வையிட்டார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் விஜே சிங், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி மார்ஷல் பாலி ஹோமி ஆகியோரையும் இந்த புதுடில்லிப் பயணத்தின் போது சரத் பொன்சேகா சந்தித்தார்.
இவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது எவ்வாறான கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது தெரியவரவில்லை. மிசோராமில் உள்ள இந்திய இராணுவத்தின் 'கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டு முறை' தொடா்பான கல்லூரியிலும் (Indian Army’s Counter Insurgency and Jungle Warfare School), கர்னாடகா பெல்கம் பகுதியில் உள்ள அதிரடிப்படைக் கல்லூரியிலும் இடம்பெற்ற சிறப்பு பாடநெறிகளுக்கு சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னதாக இந்திரா ரக கதுவீகள் இரண்டை சிறிலங்காவுக்கு இந்தியா விற்பனை செய்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கூட்டிணைந்த வகையிலான சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை கொழும்புடன் பரிமாறிக் கொள்ளும் செயற்பாடுகளையும் புதுடில்லி மேற்கொண்டது.
சிறிலங்காவுடனான ஆயுத வியாபாரங்களை புதுடில்லி எப்போதுமே வரவேற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா வழங்கிவரும் நேரடி இராணுவ உதவிகளுக்கு மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
இந்தியா உட்பட பல நட்பு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இந்த நிலையில் இராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதற்கு அந்த நாடுகள் முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளையில் சிறிலங்காவின் போர் நிலைப்பாட்டுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாகச் செயற்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு தாம் நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தொடர்ந்தும் வற்புறுத்திவந்த போதிலும், தேர்தல் சமயத்தில் கூட இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் யாப்பா, அதற்காக சிறிலங்கா இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், "தேர்தல் சமயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்குச் சென்று யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டனர் ஆனால், இந்திய அரசு அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்.
From
-----------
http://www.puthinam.com/full.php?2aXVrYe0dMlYM0ecQJ663b476Bn4d3h4l3cc2IvS3d424UQ2a02ZPp3e
புதன், 8 ஏப்ரல், 2009
தொடர்ந்து அதிகரிக்கிறது ஓட்டு போடாதவர்கள் எண்ணிக்கை : என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்?
லோக்சபா தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதத்தை விட ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் 40 சதவீதம் பேரது விருப்பத்துக்கு மாறாகவே பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, கோடை வெயிலில் வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட வேண்டுமா என்ற சோம்பல் தான் முக்கிய காரணங்கள்.
இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில், 1952ம் ஆண்டு தேர்தலில் 61.2 சதவீதமும், 1957ல் 62.2, 1962ல் 55, 1967ல் 61.3, 1971ல் 55.3, 1977ல் 60.5, 1980ல் 56.9, 1984ல் 64, 1989ல் 62, 1991ல் 61, 1996ம் ஆண்டு தேர்தலில் 57.94 சதவீதமும் ஓட்டுப் பதிவானது. தமிழகத்தில் 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டுப் பதிவானது; 1998ல் 56 சதவீதமாக குறைந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 60 கோடியே 23 லட்சம் பேர். அவற்றில் ஓட்டுப் போட்டவர் 37 கோடியே 37 லட்சம் பேர். 22 கோடியே 86 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லை.
மாநில அளவில் அதிகபட்சமாக திரிபுராவில் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மிகக் குறைந்த அளவாக காஷ்மீரில் 41 சதவீதம் ஓட்டுப் பதிவானது. நாட்டின் தலைநகரான டில்லியில் 51 சதவீதம் மக்கள் தான் ஓட்டுப் போட்டனர். இத்தேர்தலில் இந்தியாவில் 619 கட்சிகள் இருந்தன. ஆனால், 176 கட்சிகள் தான் தேர்தல் களத்தில் இறங்கின. அவற்றில் 138 கட்சிகளுக்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டே கிடைத்தது. 37 கட்சிகள் தான் வெற்றி பெற்றன. 138 கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்காளர் எண்ணிக்கையை கணக்கிட்டால் காங்கிரஸ் 16 சதவீதம், பா.ஜ., 15 சதவீதம், மார்க்சிஸ்ட் 3 சதவீதமும் ஓட்டு பெற்றன. அதேவேளை ஓட்டுப் போடாதவர்கள் 38 சதவீதம் பேர் இருந்தனர். அதாவது முதல் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பெற்ற ஓட்டை விட ஓட்டுப் போடாதவர்கள் தான் அதிகம்.
கடந்த 2004 தேர்தலின் போது தேசிய அளவில் மொத்த வாக்காளர்கள் 67 கோடி. ஆனால், 38 கோடியே 74 லட்சம் ஓட்டுகளே பதிவானது. இது 57.82 சதவீதமாகும். மீதமுள்ள 28 கோடி பேர் ஓட்டுப் போடாமல் இருந்து விட்டனர். இது 42.18 சதவீதமாகும். கேரளாவில் அதிகபட்சமாக 61 சதவீதம், தமிழகத்தில் 60.56 சதவீதம், தலைநகர் டில்லியில் 50 சதவீதம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 45, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகரில் 40 - 45, உத்தரகண்ட், உத்தரபிரதேசத்தில் 35, மிகக் குறைந்தபட்சமாக சிக்கிமில் 30 சதவீதம் ஓட்டுப் பதிவானது. வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதே இதற்கு காரணம் என கட்சிகள் குற்றம்சாட்டின.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26.69 சதவீதம், பா.ஜ., 22.16, மார்க்சிஸ்ட் 5.69, பகுஜன் 5.35, தேசியவாத காங்கிரஸ் 1.78, கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் பெற்ற ஓட்டு விகிதத்தை விட, ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த முறை மன்மோகன் பிரதமரானது 57 சதவீதம் பேர் அளித்த ஓட்டால் மட்டுமே. மற்றவர்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விட்டனர்.
இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில், 1952ம் ஆண்டு தேர்தலில் 61.2 சதவீதமும், 1957ல் 62.2, 1962ல் 55, 1967ல் 61.3, 1971ல் 55.3, 1977ல் 60.5, 1980ல் 56.9, 1984ல் 64, 1989ல் 62, 1991ல் 61, 1996ம் ஆண்டு தேர்தலில் 57.94 சதவீதமும் ஓட்டுப் பதிவானது. தமிழகத்தில் 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டுப் பதிவானது; 1998ல் 56 சதவீதமாக குறைந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 60 கோடியே 23 லட்சம் பேர். அவற்றில் ஓட்டுப் போட்டவர் 37 கோடியே 37 லட்சம் பேர். 22 கோடியே 86 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லை.
மாநில அளவில் அதிகபட்சமாக திரிபுராவில் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மிகக் குறைந்த அளவாக காஷ்மீரில் 41 சதவீதம் ஓட்டுப் பதிவானது. நாட்டின் தலைநகரான டில்லியில் 51 சதவீதம் மக்கள் தான் ஓட்டுப் போட்டனர். இத்தேர்தலில் இந்தியாவில் 619 கட்சிகள் இருந்தன. ஆனால், 176 கட்சிகள் தான் தேர்தல் களத்தில் இறங்கின. அவற்றில் 138 கட்சிகளுக்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டே கிடைத்தது. 37 கட்சிகள் தான் வெற்றி பெற்றன. 138 கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்காளர் எண்ணிக்கையை கணக்கிட்டால் காங்கிரஸ் 16 சதவீதம், பா.ஜ., 15 சதவீதம், மார்க்சிஸ்ட் 3 சதவீதமும் ஓட்டு பெற்றன. அதேவேளை ஓட்டுப் போடாதவர்கள் 38 சதவீதம் பேர் இருந்தனர். அதாவது முதல் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பெற்ற ஓட்டை விட ஓட்டுப் போடாதவர்கள் தான் அதிகம்.
கடந்த 2004 தேர்தலின் போது தேசிய அளவில் மொத்த வாக்காளர்கள் 67 கோடி. ஆனால், 38 கோடியே 74 லட்சம் ஓட்டுகளே பதிவானது. இது 57.82 சதவீதமாகும். மீதமுள்ள 28 கோடி பேர் ஓட்டுப் போடாமல் இருந்து விட்டனர். இது 42.18 சதவீதமாகும். கேரளாவில் அதிகபட்சமாக 61 சதவீதம், தமிழகத்தில் 60.56 சதவீதம், தலைநகர் டில்லியில் 50 சதவீதம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 45, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகரில் 40 - 45, உத்தரகண்ட், உத்தரபிரதேசத்தில் 35, மிகக் குறைந்தபட்சமாக சிக்கிமில் 30 சதவீதம் ஓட்டுப் பதிவானது. வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதே இதற்கு காரணம் என கட்சிகள் குற்றம்சாட்டின.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26.69 சதவீதம், பா.ஜ., 22.16, மார்க்சிஸ்ட் 5.69, பகுஜன் 5.35, தேசியவாத காங்கிரஸ் 1.78, கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் பெற்ற ஓட்டு விகிதத்தை விட, ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த முறை மன்மோகன் பிரதமரானது 57 சதவீதம் பேர் அளித்த ஓட்டால் மட்டுமே. மற்றவர்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விட்டனர்.
திங்கள், 6 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
